தேர்தல் பிரசார பதாகைகள் சேதம்: ஆடவர் கைது; சிறுவனிடம் விசாரணை

தேர்தல் பிரசார பதாகைகள் சேதப்படுத்தப்பட்டதன் தொடர்பில் 51 வயது ஆடவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை பின்னிரவு 1.50 மணியளவில் புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 5ல் உள்ள சாலை ஒன்றின் மின்கம்பத்தின் கீழே சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தேர்தல் பிரசார பதாகைகள் சேதப்படுத்தப்பட்டிருந்தது போலிஸ் கவனத்துக்குச் சென்றது.

அதே சாலையில் இதேபோன்ற மற்றொரு சம்பவம் நடந்தது குறித்து அந்தக் கட்சியினர் போலிசில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய ஜூரோங் போலிஸ் பிரிவு அதிகாரிகள் பதாகையைச் சேதப்படுத்தியதாகச் சந்தேிக்கப்படும் 51 வயது ஆடவரை வியாழக்கிழமை பின்னிரவு 1.50 மணியளவில் கைது செய்தனர்.

மற்றொரு சம்பவத்தில், மக்கள் செயல் கட்சியின் பதாகைகள் ஹவ்காங் அவென்யூ 10ல் சோதப்படுத்தப்பட்டிருப்பதாக கடந்த புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் போலிசிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில் இறங்கிய அங் மோ கியோ போலிஸ் பிரிவு அதிகாரிகள் 13 வயது சிறுவனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இந்த இருவரிடமும் விசாரணை தொடர்வதாக போலிஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!