தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் திட்டம் தேர்தல் முறைக்கு நிலைத்தன்மை வழங்குவதாகவும் எதிர்பாராத தேர்தல் முடிவுகளைத் தவிர்க்க உதவுவதாகவும் ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் கூறியுள்ளார்.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவுடன் சேர்ந்து இந்தத் திட்டத்தைத் தாம் தொடங்கியதை நினைவுகூர்ந்த அவர், நாடாளுமன்றத்தில் மாற்று குரல்கள் இருப்பது குறித்து தாங்கள் ஒருபோதும் அஞ்சியதில்லை என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று முன்தினம் அவர் பதிவிட்டார்.
முன்னதாக வேட்புமனுத் தாக்கல் தினம் அன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களைப் போலவே தொகுதியில்லா எம்.பி.க்களுக்கும் இப்போது நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் முழு உரிமை இருப்பதை நினைவுபடுத்தினார்.