யூஹுவா தனித்தொகுதியில் போட்டியிடும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ராபின் லோ நேற்று யூஹுவா சந்தை மற்றும் உணவு நிலையத்துக்கு உலா சென்றார்.
தன் ஆதரவாளர்களுடன் அவர் படம் எடுத்துக்கொண்டார். தான் தேர்தலில் வெற்றி பெற்றால் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கலாம் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
மோட்டார்சைக்கிள்களுக்கான உரிமைச் சான்றிதழ்கள் கடந்த 10 ஆண்டுகளில் $100லிருந்து $4,000க்கு உயர்ந்து விட்டதாகத் தெரிவித்த அவர், இது தான் எழுப்பும் பிரச்சினை என்றார்.
கார் வாங்க முடியாதவர்களுக்கு மோட்டார் சைக்கிள்தான் வழி என்று இருக்கும்போது மோட்டார்சைக்கிள் சான்றிதழ் விலை அதிகரித்து இருப்பது ஒரு பிரச்சினை என்று அவர் கூறினார்.
இத்தகைய அதிகரிப்பு ஏழைகளையே மிகவும் பாதிக்கும் என்பதால் இதை நியாயமான ஒன்று என்று தான் கருதவில்லை என்றும் திரு ராபின் லோ குறிப்பிட்டார்.