இந்தப் பொதுத்தேர்தல் நேரத்தில் தொகுதி உலாக்களிலும் வீட்டு சந்திப்புகளிலும் கூடுதலாக வட்டாரவாசிகளைச் சந்திக்க முடிந்ததாக 65 வயது மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் தெரிவித்தார்.
இதுவரை தாம் ஐந்து பொதுத்தேர்தல்களிலும் ஓர் இடைத்தேர்தலிலும் பங்கேற்றியுள்ளபோதும் இவற்றில் எதுவுமே இதுபோன்ற ஓர் அசாதாரண வினோதத்தை ஏற்படுத்தில்லை என்று பாசிர் ரிஸ் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சிக்காகப் போட்டியிடும் அவர் கூறினார்.
கொவிட் கிருமிப் பரவல் சூழலில் அதிகமானோர் தங்களது வீடுகளிலிருந்து வேலை செய்து வருவதும் வீட்டுக்கு அருகிலேயே சந்தைப் பொருட்களை வாங்குவதும் விடுமுறைக்காக வெளியே செல்லாமல் இருப்பது இதற்குக் காரணம் என்று திரு டியோ நேற்று முன்தினம், இடம்பெற்ற பாசிர் ரிஸ் பொங்கோல் குழுத் தொகுதி க்கான இரண்டாவது இணைய பேரணி கலந்துரையாட லின்போது இதனைக் கூறினார்.
“வழக்கமான பொதுத்தேர்தல்களைக் காட்டிலும் இம்முறை குறைந்த காலத்தில் மேலும் பலரைச் சந்திக்கும் சுவாரசியமான வாய்ப்பினை இது வழங்கியுள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.