சிங்கப்பூரர்கள் எதிர்கொள்ளும் விவகாரங்கள் தொடர்பாக பிரசாரம் செய்யும்படி மக்கள் செயல் கட்சிக்கு மக்கள் சக்தி கட்சியின் தலைமைச் செயலாளர் திரு கோ மெங் செங் அழைப்பு விடுத்துள்ளார்.
மக்கள் செயல் கட்சி இந்தத் தேர்தலில் பண்பற்ற முறையிலான அரசியல் தந்திரங்களைப் பயன்படுத்திருப்பதாக அவர் குறைகூறினார்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் சுவரொட்டிகள் கிழித்து எறியப்பட்டதும் எதிர்க்கட்சிகள் வழங்கும் துண்டுப்பிரசுரங்களை வீச குடியிருப்பாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுவதும் தம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக திரு கோ கூறினார்.
திரு கோ மெக்பர்சன் தனித் தொகுதியில் மக்கள் செயல் கட்சியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.