ஹவ்காங் தனித் தொகுதி, அல்ஜுனிட் குழுத் தொகுதி, செங்காங் குழுத் தொகுதி ஆகியவற்றுக்கான வாக்கு எண்ணிக்கையின் முன்னோட்ட நிலவரத்தில் பாட்டாளிக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருந்ததை அறிந்ததும் அல்ஜுனிட் குடியிருப்பாளரான 56 வயது திரு ஜான் வி. சுந்தரராஜு (இடது), கட்சியின் கொடியை அணைத்துக் கொண்டார். “பிறந்தது முதல், நான் பாட்டாளிக் கட்சி ஆதரவாளராக இருந்து வருகிறேன். பாட்டாளிக் கட்சியின் நீல நிறம், என் ரத்தத்தில் ஓடுகிறது,” என்றார் திரு ஜான். ஹவ்காங் அவென்யூ 5ல் உள்ள புளோக் 322 காப்பிக் கடையில் பாட்டாளிக் கட்சி ஆதரவாளர்கள் திரண்டு கொண்டாடினர்.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்