பாட்டாளிக் கட்சியைப் பாராட்டிய லீ சியன் யாங்

நாட்டுப்பற்று இருக்கும் அதே வேளையில் எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பது சாத்தியமான ஒன்று என சிங்கப்பூரர்கள் காட்டியிருப்பதாக திரு லீ சியன் யாங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று தெரிவித்தார். கொரோனா நெருக்கடி

நிலையில் நடத்தப்பட்ட தேர்தலில் மக்கள் செயல் கட்சி எளிதில் வென்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட திரு லீ சியன் யாங், அதற்கு மாறாக அதன் வாக்கு விகிதம் கணிசமான அளவு குறைந்திருப்பதைச் சுட்டினார். சிங்கப்பூரின் கிழக்கு, மேற்குப் பகுதிகளில் எதிர்க்கட்சிகளுக்குக் கூடுதல் வாக்குகள் கிடைத்திருப்பதாக அவர் கூறினார்.

“பாட்டாளிக் கட்சி மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அக்கட்சி இரண்டு குழுத் தொகுதிகளையும் ஒரு தனித் தொகுதியையும் வென்றுள்ளது. சிறந்த தலைமைத்துவத்தை அது வெளிப்படுத்தியுள்ளது. தலைமைத்துவ மாற்றத்தை அது சுமுகமாக நடத்திக் காட்டிஉள்ளது. வுலுவான, துடிப்புமிக்க, இளமையான, பல பின்னணிகளைக் கொண்ட அணியினரை அது களம் இறக்கியது,” என்று பிரதமர் லீ சியன் லூங்கின் இளைய சகோதரரான திரு லீ சியன் யாங் பாராட்டி னார். சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக்கு சராசரியாக 40 விழுக்காடு வாக்குகள் கிடைத்தது பெரிய சாதனை என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!