வெளிநாட்டு ஊழியர்களுக்கான திறன் போட்டி

- கி.ஜனார்த்தனன்

தமிழ் மற்றும் வங்காள மொழி பேசும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான டிக்டோக் காணொளித் திறன் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்களில் பத்துப் பேர் பரிசுகளை வெல்லவிருக்கின்றனர்.

தொடர்பு, தகவல் அமைச்சு ஏற்பாடு செய்துள்ள இந்தப் போட்டி, கொவிட்-19 கிருமிப் பரவல் காலகட்டத்தில் ஊழியர்களுக்கு ஊக்கமும் ஆதரவும் கொடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இடம்பெறுகிறது.


இதில் ‘சில் பன்னு மாப்பி’ என்ற தமிழ் அங்கத்தில் சிங்கப்பூர், இந்திய கலைஞர்களின் படைப்புகள் மட்டுமின்றி இங்குள்ள வெளிநாட்டு ஊழியர்கள் சுயமாக தயாரித்துள்ள காணொளிகளைக் காட்டும் ‘திறமையைக் காட்டு மாப்பி’ அங்கமும் இடம்பெறுகிறது.

Remote video URL

சமர்ப்பிக்கப்பட்ட காணொளிகளில் சிறந்த 20 படைப்புகளை தமிழக திரைக்கலைஞர் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இன்று (ஜூன் 29) முதல் @sg4mw என்ற டிக்டோக் கணக்கில் அந்தக் காணொளிகள் பதிவேற்றம் செய்யப்படும். அடுத்த நான்கைந்து நாட்களில் ஆக அதிக ‘லைக்குகள்’ பெறும் காணொளிக்கு முதல் பரிசாக $1,000 கொடுக்கப்படும். அத்துடன், இரண்டாவது பரிசாக $500யும் மூன்றாவது பரிசாக $300யும் மற்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும். இப்போட்டியின் முடிவுகள் ஜூலை 5ஆம் தேதி வெளியிடப்படும்.

Remote video URL
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!