2020 பொதுத் தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவைப் பதவிகளைப் பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் இந்திய இனத்தவர்கள் ஆறு பேர் இடம்பெற்று உள்ளனர். அவர்களில் (மேல், வலமிருந்து) திரு தர்மன் சண்முகரத்னம், குமாரி இந்திராணி ராஜா, திரு எஸ் ஈஸ்வரன், டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், திரு கா சண்முகம், டாக்டர் ஜனில் புதுச்சேரி ஆகியோர் அடங்குவர். அதேபோல் மலாய்க்காரர்கள் ஆறு பேரும் அமைச்சரவை பதவிகளைப் பெற்றுள்ளனர். அவர்களில் (கீழ், இடமிருந்து) திரு மசகோஸ் ஸுல்கிஃப்லி, டாக்டர் மாலிக்கி ஒஸ்மான், திரு ஸாக்கி முகம்மது, டாக்டர் ஃபைசல் இப்ராஹிம், திருவாட்டி ரஹாயு மஹ்ஸாம் ஆகியோர் அடங்குவர். புதிய நாடாளுமன்ற உறுப்பினரான திரு முகம்மது ஃபாமி, தென்கிழக்கு மேயராகச் செயல்படுவார்.
அமைச்சரவைப் பதவிகள்: 37 பேரில் 9 பேர் பெண்கள்
பொதுத் தேர்தலை அடுத்து அமைச்சரவைப் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் 37 பேரில் ஒன்பது பேர் பெண்கள். திருவாட்டி ஜோசஃபின் டியோ, திருவாட்டி கிரேஸ் ஃபூ, குமாரி இந்திராணி ராஜா, டாக்டர் ஏமி கோர், திருவாட்டி சிம் ஆன், திருவாட்டி லோ யென் லிங், திருவாட்டி சுன் சூலிங், திருவாட்டி கான் சியாவ் ஹுவாங், திருவாட்டி ரஹாயு மஹ்ஸாம் ஆகியோர் அவர்களில் அடங்குவர். இவர்களில் இரண்டு பேர் புதிதாக பதவி ஏற்று இருப்பவர்கள். மக்கள் செயல் கட்சியின் புதுமுகமான கான் சியாவ் ஹுவாங், கல்வி மற்றும் மனிதவள துணை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். முந்தைய நாடாளுமன்ற உறுப்பினரான ரஹாயு மஹ்ஸாம் செப்டம்பர் 1 முதல் சுகாதார அமைச்சுக்கான நாடாளுமன்றச் செயலாளராகப் பணியாற்றுவார்.