தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிங்கப்பூர் ராட்டினச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
வழக்கமான பராமரிப்புப் பணியின்போது அந்தத் தொழில்நுட்பப் பிரச்சினை கண்டுபிடிக்கப்பட்டது.
ராட்டினத்தை இயக்கும் ஸ்ட்ராக்கோ லெஷர் நிறுவனம் தெரிவித்தது.
தேவையான ஆய்வு, பழுதுபார்ப்பு, சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள கட்டட, கட்டுமான ஆணையத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அந்நிறுவனம் கூறியது.
மீண்டும் ராட்டினம் எப்போது சுழலத் தொடங்கும் என்பது தெரிவிக்கப்படவில்லை.
ராட்டினத்தில் சுற்ற முன்பதிவு செய்து, பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ள முயன்று வருவதாக ஸ்ட்ராக்கோ லெஸர் நிறுவனம் கூறியது.
ராட்டினத்தில் ஏறுவதற்கான தேதியை மாற்றியமைக்க அவர்கள் singaporeflyer.com எனும் இணையத்தளத்தை நாடலாம் அல்லது முன்பதிவு முகவையை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம்.