கேலாங் செராய் பகுதியில் புளோக் 22க்கு அருகில் இருக்கும் மூத்தோர் கூடும் இடத்தில் 2014ஆம் ஆண்டிலிருந்து மாதந்தோறும் காலை உணவுக் கூட்டத்தை நடத்தி மூத்தோர் சிலர் கூடி உரையாடி வந்தனர். அதன் விளைவாக அப்பகுதியில் வசிப்போரின் தேவைகளைப் புரிந்துகொள்ளவும் அதன் அடிப்படையில் அப்பகுதியில் சில மேம்பாடுகளைச் செய்யவும் முடிந்தததாக மரின் பரேட் குழுத்தொகுதியின் அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான இணைப் பேராசிரியர் ஃபாத்திமா லத்தீஃப் கூறினார்.
பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதியைப் பார்வையிட உள்ளார். அந்தப் பகுதியில் நடைபெறும் சமூகப் பணிகளைப் பற்றி நேற்று செய்தியாளர்களிடம் கூறிய டாக்டர் ஃபாத்திமா, மூத்தோருடைய கருத்துகளின் அடிப்படையில் பல இடங்களில் இருக்கைகள் அமைக்கப்பட்டதாகவும் சக்கர நாற்காலி களைச் செலுத்துவதற்கான பாதைகள் அமைக்கப்பட்டதாகவும் சொன்னார். அந்தப் பகுதியில் வசிக்கும் மூத்தோருடன் உரையாடல்கள் நடத்தியதால் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அதற்கேற்ற தீர்வை அமைக்க வேண்டிய சரியான இடங்கள் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது என்றார் அவர்.
மாதாந்திர காலை உணவு உரையாடல் நிகழ்ச்சியில் கேலாங் பகுதியில் வசிக்கும் மூத்தோருடன் கலந் துரையாடியதால் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அதற்கேற்ற தீர்வை அமைக்க வேண்டிய சரியான இடங்கள் பற்றி அறிந்துகொள்ள முடிந் தது என்றார் மரின் பரேட் குழுத்தொகுதியின் நாளுமன்ற உறுப்பினரான இணைப் பேராசிரியர் ஃபாத்திமா லத்தீஃப் (பச்சைநிறச் சட்டை அணிந்தவர்) அதில் பங்கேற்போருக்காக கடைக்காரர் சங்கத்தின் உறுப் பினர்கள் அடிக்கடி பழங்கள், பானங்களை நன்கொடையாக அளித்தனர். பல்வேறு அமைப் பினரும் அரிசி போன்ற பொருட்களை வழங்கினர். படம்: சாவ் பாவ்