மூத்த குடிமக்கள் துடிப்புடன் மூப்படைவதையும் வாசிப்பதையும் ஊக்குவிக்கும் நோக்கில் 11 மூத்தோர் நடவடிக்கை நிலையங்களில் காலாண்டு அடிப்படையில் புதிய திட்டங்களை அறி முகப்படுத்தவுள்ளதாக நேற்று தேசிய நூலக வாரியம் அறிவித்தது. இந்த நிலையங்களுக்கு 2012ஆம் ஆண்டு முதல், மூத்தோருக்கான வாசிக்கும் இடத்தை அமைத்தல், அதிகமான புத் தகங்களை அவர்கள் பயன்படுத்த வழிவகுத்தல் போன்ற நூலகச் சேவைகள், நடவடிக்கைகள் ஆகியவற்றை நூலக வாரியம் வழங்கி வருகிறது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூத்தோர் பயனடைவர் எனக் கருதப்படும் தாமான் ஜூரோங்கில் உள்ள தை ஹுவா குவான் சேவை நிலையத்தில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டது. நூலக வாரிய ஊழியர்கள் நடத்தக் கூடிய கலை, கைவினை, கதை சொல்லுதல் போன்ற நிகழ்ச்சிகளை இந்தத் திட்டம் உள்ளடக்கியதாக இருக்கும். அத்தகைய நடவடிக்கைகள் மூத்தோர் சுறுசுறுப்புடன் இருப்பதற்கும் செயல்படவும் வழி வகுக்கும் என நூலக வாரியம் தெரிவித்தது. மூத்தோருக்குப் பயனுள்ள நடவடிக்கைகளைக் கண் டறிவதற்கான ஆலோசனை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.