புக்கிட் பாத்தோக் தனித் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் ஓங் குடியிருப்பாளர்களுக்குத் தனிப்பட்ட முறை யில் கடிதம் எழுதி மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கிறார். மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர், தகாத உறவு காரணமாக அப்பதவியிலிருந்து விலகிவிட்டார். திரு ஓங்கின் கடிதம் ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளில் குடி யிருப்பாளர்களுக்கு புதன்கிழமை அனுப்பப்பட்டது. அதில் தேதி குறிப்பிடப்படவில்லை.
"என் சொந்த வாழ்வில் சீர்தூக்கிப் பார்க்காமல் மோசமான ஒரு செயலைச் செய்துவிட்டேன். அதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி விட்டேன். "உங்களை ஏமாற்றியதற்காக மிகவும் வருந்துகிறேன். உங்க ளுக்குச் சேவையாற்ற என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சேவை ஆற்ற முடியவில்லை என்பது எனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது," என்று அவர் கடிதத்தில் எழுதி இருக்கிறார்.