வாகனத்தை நிறுத்திவைத்ததற்காக இரண்டு மடங்கு கட்டணம் விதிக்கப்பட்டதாக புகார்

வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த தற்காகத் தங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் விதிக்கப்பட்ட தாக முன்னிலும் அதிக வாகன உரிமையாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த விவகாரம் பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித் தாள் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து குறைந்த பட்சம் அரை டஜன் வாகன உரிமையாளர்கள் தங்களுக்கும் அப்படி நிகழ்ந்திருப்ப தாக அந்தச் செய்தித்தாளின் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித் தனர்.

ஃபேஸ்புக் புழங்கியான டே பெங் டோங் என்பவர் தனக்கு 2014ல் ஐந்து தடவை இருமடங்கு கட்டணம் விதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதற்கிடையே, இத்தகைய தவறுகள் அரிதே என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் நகரச் சீர மைப்பு ஆணையமும் குறிப்பிட்டன. பொதுவாக இத்தகைய தவறு கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்படுபவை என்று அவை தெரிவித்தன. வாகன உரிமையாளர் புகார் தெரிவித்தாலொழிய இத்தகைய இரட்டைக் கட்டணக் கழிப்புப் பற்றி தங்களுக்குத் தெரியாது என்று கார்ப்பேட்டை நடத்துவோர் குறிப்பிட்டனர்.

வாகனத்தை நிறுத்தி வைத்திருந்ததற்காக தங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் விதிக்கப்பட்டதாக தெரிவித்த வாகன உரிமையாளர்கள் விகிதம் முன்பைவிட அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!