தமிழவேல்
சிங்கப்பூரின் பொதுப் போக்கு வரத்துத் துறை, குறிப்பாக ரயில், பேருந்து சேவைகளிலும் சட்ட, கொள்கை கட்டமைப்பிலும் பெரும் முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் கூறி யுள்ளார். சிங்கப்பூரில் போக்குவரத்தின் உருமாற்றத்திற்குப் பின்னால் உள்ள உந்துசக்திகளை அவர் பட்டியலிட்டார். ஒன்று, ஓட்டுநர் இல்லா வாகனங்கள், தொழில்நுட்பத்தின் பிரவேசம், 'உபர்', 'கிராப்' போன்ற புதிய வர்த்தக முறைகளின் அறி முகம், மூப்படைந்து வரும் சமூகம், சுகாதாரத்துக்கு ஏதுவான சூழ லில் அதிகரித்துவரும் தேவை ஆகியவை அவை.
பொதுப் போக்குவரத்து சேவைகள் எளிதில் கிடைப்பது, ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வதற்கு இருக்கும் தெரிவுகள், பொதுப் போக்குவரத்து உன்னதம் ஆகிய வற்றை மேம்படுத்துவதில் தாம் கவனம் செலுத்தவுள்ளதாக நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போக்குவரத்து அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் அவர் கூறினார்.