தமிழவேல்
சிங்கப்பூரர்களை அதிகம் பாதித்து சுகாதாரத் துறைக்கு பெரிய சவாலாக உள்ள நீரிழிவு நோய்க்கு எதிராக போர் தொடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் அறிவித்துள்ளார். இந்த நோயால் சிங்கப்பூருக்கு ஏற்கெனவே $1 பில்லிய னுக்கு மேல் செலவாகியுள்ளது. மேலும் சிங்கப்பூரில் தற்போது 400,000க்கும் அதிகமானோருக்கு நீரிழிவு நோய் உள்ளது. இதில் மூன்றில் ஒருவருக்கு நோய் இருப்பது தெரிவதில்லை. தங்களுக்கு நீரிழிவு உள்ளதை அறிந்தவர்களில் மூன்றில் ஒருவர் அதைக் கட்டுப்படுத்துவதில்லை என்று நேற்று நாடாளு மன்றத்தில் நடந்த சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது கூறினார் அமைச்சர் கான்.
"நீரிழிவு நோயைக் கண்டறி யாமல் விட்டால் அல்லது சிகிச்சை அளிக்காமல் அல்லது முறையான சிகிச்சை அளிக்காது இருந்தால் அந்நோய் இதய நோய், பக்க வாதம், சிறுநீரகக் கோளாறு, கண் பார்வை இழப்பு, கை கால் இழப்பு போன்ற பிரச்சினைகளை விளைவிக்கும்," என்றார் திரு கான் கிம் யோங். நீரிழிவு நோய் பிரச்சினையால் ஒவ்வொரு நாளும் சராசரி யாக நான்கு சிங்கப்பூரர்கள் கை, கால்களை இழக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.