நாடு சுதந்திரம் பெற்ற 51வது ஆண்டில், வெளியிடப்பட்ட இந்த வரவு செலவுத் திட்டம், மாற்றத் தைக் கோருவதன் வழி அடுத்த 50 ஆண்டுகளுக்கான மாற்றத் தின் போக்கை உருவாக்கியுள்ளது. மாற்றத்தைக் கோருவதே இரண்டு வார விவாதத்தில் அமைச் சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கள் அனைவரிடமும் எதிரொலித்தது என்று நாடாளு மன்ற நாயகர் ஹலிமா யாக்கூப் தெரிவித்தார். அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதங்களை நேற்று நிறைவு செய்து அவர் உரை யாற்றினார்.
இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கிய அவர், இது 13வது நாடாளுமன்றத்திற்கும் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட்டிற்கும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டி ருக்கும் நாடாளுமன்ற உறுப்பி னர்கள், தொகுதியில்லா நாடாளு மன்ற உறுப்பினர்கள், நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் முதல் வரவு செலவுத் திட்டம் என்று கூறினார்.