சிங்கப்பூரின் வரலாறு நடுநிலைமை யுடன் எடுத்துக்கூறப்படுகிறது என்று கலாசார, சமூக, இளையர் அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரி வித்துள்ளார். 'அதிகாரபூர்வ வரலாறு' எனும் பெயரில் எந்த வரலாற்றுக் குறிப்பும் யார் மீதும் திணிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு லோ தியா கியாங், பொதுமக்களின் பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டை ஊக்குவிக்க சிங்கப்பூரின் வர லாற்றைப் பல்வேறு கோணங்களில் எடுத்துக்காட்ட தேசிய மரபு டைமைக் கழகத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆக்டிவ்எஸ்ஜி காற்பந்துப் பயிற்சி நிலையத்தைத் தொடங்கி வைத்து சிறுவர்களுடன் உற்சாகமாக உரையாடும் கலாசார, சமூக, இளையர் அமைச்சர் கிரேஸ் ஃபூ. படம்: ஸ்போர்ட்ஸ்எஸ்ஜி