சிங்கப்பூரையும் இந்த வட்டாரத்தையும் கடந்த ஆண்டு பாதித்த புகைமூட்டம் போல, இவ்வாண்டு ஏற்பட வாய்ப்பில்லை என்று இந்தோனீசியாவின் நிலமீட்பு அமைப்பு தலைவர் நஸீர் ஃபோயித் கூறியிருக்கிறார். "தீச்சம்பவங்கள் இருக்காது என்று நான் உத்தரவாதம் அளிக்க முடியாது. "ஆனால், புகைமூட்டத்தை ஏற்படுத்தும் தீச்சம்பவங்கள் கணிசமாகக் குறையும்," என்றார் அவர். அனைத்துலக விவகாரங்களுக் கான சிங்கப்பூர் கழகம் ஏற்பாடு செய்திருந்த நீடித்து நிலைத்திருக்கக்கூடிய உலக வளங்களுக் கான கருத்தரங்கின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
ரியாவ், கலிமந்தானின் சில பகுதிகள், ஜாம்பி உள்ளிட்ட இந்தோனீசியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கிய பொருட்களைக் கொண்ட 2.26 மில்லியன் ஹெக்டர் நிலங்களை மீட்பதை நோக்கமாகக் கொண்ட அமைப்பை இவ்வாண்டு ஜனவரி மாதம் நிறுவினார் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ.
கடந்த மாத இறுதியில் செங்காங் வட்டாரத்தில் சூழ்ந்திருந்த புகைமூட்டம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்