உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி யில் மேற்கொள்ளப்பட்ட சோதனை யில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஆறு சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு கிலோ எடையுடைய நான்கு அபின் கட்டிகள், 310 கிராம் எடையுள்ள 'ஐஸ்' எனப்படும் போதைப்பொருள் இருந்த வாகனத்தை ஓட்டி வந்த 25 வயது சிங்கப்பூரர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் ஒரு பெண், இரு ஆடவர்கள் கைது செய்யப் பட்டனர். மேலும் போதைப் புழங்கிகள் என சந்தேகிக்கப்படும் இரு ஆட வரும் கைது செய்யப்பட்டனர்.
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியிலும் விசாரணையிலும் பறிமுதல் செய்யப் பட்ட போதைப் பொருட்கள். படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு