சுதாஸகி ராமன்
நீரிழிவு நோய், காய்ச்சல், கீல்வாதம் என்று பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவது பற்றி புதிய தாதியர்களுக்குத் தெரிந்திருந்தாலும் நெஞ்சுவலியால் அவதியுறும் நோயாளிகளுக்கான பரா மரிப்பு குறித்த அணுகுமுறைகள் பற்றி அவர்கள் புரிந்துகொள்ள சிரமப்படுகிறார்கள். நெஞ்சுவலியுடைய நோயாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்க மருத்துவமனையின் மூத்த தாதியர்களையே அவர்கள் எதிர் பார்த்திருப்பதை டான் டொக் செங் மருத்துவமனையின் மூத்த ஸ்டாஃப் நர்ஸ் குமாரி காயத்திரி தேவதாஸ், 31, கவனித்தார்.
தாதியர் படிப்பின்போது நெஞ்சு வலிக்கான பராமரிப்பு அணுகுமுறைகளைத் தாதியர்கள் கற்றிருந்தாலும் மருத்துவமனை சூழலில் நோயாளிகளைக் கவனித்து பராமரிக்கும் அனுபவத்தைப் அவர்கள் பெற்றிருக்க வில்லை என்பதை காயத்திரி உணர்ந்தார். அவர்களுக்குத் தக்க தொழிற்பயிற்சிகளை அளித்து உதவ காயத்திரி விழைந்தார்.
மூத்த ஸ்டாஃப் நர்ஸ் குமாரி காயத்திரி தேவதாஸ் (வலது), நெஞ்சுவலி சமாளிப்பைப் பற்றிய பாவனைப் பயிற்சிகளை அளிக்கும் விளையாட்டுச் செயலியை மடிக்கணினியில் இயக்கிக் காட்டுகிறார். படம்: தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம்