மத்திய கிழக்குக்குச் சென்றுள்ள பிரதமர் லீ சியன் லூங், ஜோர் தானில் உள்ள பல்கலைக்கழகங் களில் பயிலும் சுமார் 100 சிங்கப் பூரர்களைச் சந்தித்து அவர்களு டன் கலந்துரையாடினார். அந்த மாணவர்கள் சுற்றுப்புற, நீர் வள அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லியுடன் கலந்துரையாட லில் கலந்துகொண்டனர். சிங்கப்பூரின் சமூக நல்லிணக் கத்திற்கு உதவுவதில் தங்களுக்கு பங்கு இருக்கிறது என்பதை அந்த மாணவர்கள் தெரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்று பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரு மசகோஸ் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கில் பயிலும் பலநூறு சிங்கப்பூரர்களை ஈடு படுத்துவதில் முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் தீவிரமாகச் செயலாற்றி வருகிறது என்றும் கெய்ரோ, ஜித்தா நகர்களில் இருக்கும் சிங் கப்பூர் தூதரகங்களில் பணியாற் றும் அதிகாரிகள், அந்த மாணவர் களின் தேவைகள் நிறைவேற்றப் படுவதை உறுதிப்படுத்துகிறார் கள் என்றும் அமைச்சர் கூறினார்.
பிரதமர் லீ சியன் லூங் (நடுவில்) ஜோர்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் சிங்கப்பூரர்களை நேற்று முன்தினம் சந்தித்து உரையாடினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்