இந்தோனீசிய காட்டுத் தீச்சம்பவங்கள் பற்றி சிங்கப்பூர் தெரிவித்த கருத்துகளுக்கு இந்தோனீசியா மறுப்பு தெரிவித்துள்ளது. "கருத்துகளைத் தெரிவிப்பதற்குப் பதிலாக சிங்கப்பூர் எல்லை கடந்து பரவும் புகையைக் கட்டுப்படுத்துவதில் தன் சொந்தக் காரியத்தில் ஒருமித்த கவனத்தைச் செலுத்தவேண்டும்," என்று இந்தோனீசியாவின் சுற்றுப்புற, காட்டுவள அமைச்சர் சித்தி நுர்பயா உள்ளூர் சுற்றுப்புறச் செய்தி இணையத்தளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனீசியாவின் பொக்கோர், மெரண்டி தீவு வட்டாரம், ரியாவ் மாகாணங்களில் கடந்த மாதம் 15ஆம் தேதி ஏற்பட்ட புகைமூட்டம். படம்: ராய்ட்டர்ஸ்