பாதுகாப்பு அதிகரிப்பு நடவடிக்கையாக சிங்கப்பூருக்கு வரும்போதும் இங்கிருந்து வெளியேறும்போதும் சுற்றுப்பயணிகள் பெருவிரல் ரேகையைப் பதிவுசெய்யும் விதமாக புதிய 'பயோஸ்கிரீன்' முறையை குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணை யம் அறிமுகப்படுத்துகிறது. நாளை 20ஆம் தேதி முதல் நடப்பிற்கு வரும் இந்தப் பெருவிரல் ரேகைப் பதிவு முறை படிப்படியாக கடல்வழி, நிலவழி சோதனைச் சாவடி பயணிகள் கூடங் களில் அறிமுகப்படுத்தப்படும்.
வரும் மாதங்களில் ஆகாயவழி சோதனைச் சாவடிகளிலும் 'பயோஸ்கிரீன்' முறை முழுமையாக அமல்படுத்தப்படும் என்று ஆணையம் தெரிவித்தது. தானா மேரா படகு முனையத்தில் கடந்த ஆண்டு வெற்றிகரமாகப் பரிசோ திக்கப்பட்ட இந்த முறை, பயணிகளின் அடையாளங்களைச் சரிபார்க்கும் தனது முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.