என்டியுசி இன்கம் நிறுவனம் சைக்கிள்கள், மின்சாரத்தில் ஓடும் ஸ்கூட்டர்கள், மின்சக்கர வண்டி கள் போன்றவற்றைப் பயன்படுத்து வோருக்குப் பாதுகாப்பு வழங்கும் காப்புறுதித் திட்டத்தை தொடங்கி இருக்கிறது. இத்தகைய திட்டங்களில் இதுவே முதலானது. 'சொந்த நடமாட்டப் பாதுகாப்பு' என்று இந்த திட்டத்துக்குப் பெயர். எதிர்பாராதவிதமாக ஏற்படும் மரணம், நிரந்தரமான உடற்குறை, காயத்துக்கான மருத்துவச் செலவு கள் போன்றவை ஏற்படும்பட்சத் தில் அதற்கான பாதுகாப்புக் காப் புறுதியை இந்தப் புதிய திட்டம் வழங்குகிறது என்று என்டியுசி இன்கம் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இத்தகைய வாகனங்களைப் பயன்படுத்தி சிங்கப்பூரில் செல்லும் போது, மலையேறும்போது, இறங் கும்போது ஏற்படுகின்ற விபத்து களை இந்த திட்டம் உள்ளடக்கும். இதில் சேர்வோர் ஆண்டுக்கு $96 செலுத்த வேண்டும்.