துணைப் பிரதமரும் தேசிய பாதுக்காப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் சிங்கப்பூர் தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் தலைவருமான டியோ சீ ஹியன் (வலமிருந்து இரண்டாவது), செம்ப்கார்ப்=என்யுஎஸ் நிறுவன சோதனைக்கூடம் தொடக்கவிழாவில் இடம் பெற்றிருந்த கண்காட்சி கூடங்களின் ஒன்றைச் சுற்றிப் பார்க்கிறார். இந்த சோதனைக்கூட தொடக்கவிழா சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக பொறியியல் அரங்கில் நேற்று நடந்தது.
இந்தச் சோதனைக்கூடம் இந்தப் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்கள், செம்ப்கார்ப் நிறுவனத்தின் பொறியாளர்கள் ஆகியோரின் ஒட்டுமொத்த ஆற்றல்களைக் கூர்தீட்டும். எரிசக்தி உருவாக்கம், தொழில் துறை கழிவுநீர்த் துப்புரவு, நீர் மறுபயனீடு, கழிவுகளை மதிப்புமிக்க கட்டுமானத் துறை சாதனங்களாக மாற்றுவது ஆகிய துறைகளில் இந்த ஆற்றல் பயன்படுத்தப்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்