புக்கிட் பாத்தோக் தனித் தொகுதியில் இடைத் தேர்தல் மே 7ஆம் தேதி நடை பெறவிருக்கிறது. பொதுத்தேர்தல் நடந்து முடிந்து 8 மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக அத்தொகுதி மக்கள் மீண்டும் வாக்களிக்க உள்ளனர். அதிபர் டோனி டான் கெங் யாம் நேற்று அதற்கான தேர்தல் ஆணையைப் பிறப்பித் தார். வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டிய நாள் ஏப்ரல் 27ஆம் தேதி. கெமிங் தொடக்கப்பள்ளி வேட்புமனுத்தாக்கல் செய்யும் மையமாக அறி விக்கப்பட்டுள்ளது. ஒன்பது நாட்கள் பிரசாரத்திற்குப் பின்னர் தேர்தல் நாளுக்கு முந்தைய நாளான மே 6ஆம் தேதி பிரசார ஓய்வு நாளாகக் கடைப்பிடிக்கப்படும்.
மக்கள் செயல் கட்சி, சிங்கப்பூர் ஜன நாயகக் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கிடையே மட்டும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் 12ஆம் தேதி அந்தத் தனித் தொகுதியின் ஆளும் மக்கள் செயல் கட்சி உறுப்பினரான டேவிட் ஓங், 54, சொந்தக் காரணங்களுக்காக புக்கிட் பாத்தோக் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்