இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 'ஏஷியன் பிரிசன்ஸ் லாக்டவுன் சேலஞ்ச்' பயிற்சியில் சிங்கப்பூர் சிறைச்சாலை சேவை கள், மக்காவ் சீர்திருத்த சேவை இலாக்கா, தாய்லாந்து சீர்திருத்தப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த 50 அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தப் பயிற்சியில் பங்கேற்ற அந்த அதிகாரிகள், ஆபரேஷன் 'மேன்டவுன்' எனும் போட்டியில் கலந்துகொண்டனர் . அப்போது, அதிக ஆபத்தான கைதிகளைச் சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் நடத்தப்படும் திடீர் தாக்குதலைச் சமாளிப்பது போன்ற பாவனை செயலில் ஈடுபட்டனர். சாங்கி சிறைச்சாலையில் நேற்றுடன் நிறைவு பெற்ற 'மேன்டவுன்' போட்டியில், சிங்கப்பூரின் சிறைச்சாலையின் அவசரகால செயல் மீட்புக் குழு முதலிடத்தில் வந்தது.
ஆப்ரேஷன் 'மான்டவுன்' போட்டிக்கான பாவனை செயலின்போது உயிரிழந்தவரை கொண்டுச் செல்லும் தாய்லாந்து சீர்திருத்தப் பிரிவு அதிகாரிகள் (சிவப்பு தொப்பி). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்