போதைப்பொருளுக்கு எதிரான தனது கொள்கைகளை ஒரு போதும் சிங்கப்பூர் தளர்த்திக் கொள்ளாது என்று சட்ட, உள் துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார். தனது அணுகுமுறையைக் காட்டிலும் மற்றோர் அணுகு முறை சிறந்த பலன்களை அளிப்பதாக நிரூபிக்கப்படும் வரை சிங்கப்பூர் இப்போதைய அணுகுமுறையைத் தொடரும் என்று திரு சண்முகம் உறுதியாகக் கூறினார். ஐக்கிய நாடுகள் நிறுவன பொது மன்றத்தில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.
போதைப்பொருட்களுக்கு எதிரான அனைத்துலகப் போர் தான் பெரும்பாலான வன்முறை களுக்குக் காரணம் என்றும் அதனால் சட்ட அமலாக்கத்தை வலியுறுத்தாத 'மனிதாபிமானத் தீர்வு' காணப்பட வேண்டும் என்றும் மெக்சிகோ, குவாட்ட மாலா, கொலம்பியா போன்ற நாடுகள் வாதிட்டதைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் இடம்பெற்றது. "சிங்கப்பூரின் போதைப் பொருள் எதிர்ப்புக் கொள்கை கள் ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கியுள்ளன. வாக்கு வன்மையுடன் பேசுவது வேறு. பத்து வயதுக் குழந்தையைத் தனியாகப் பேருந்தில் அனுப்பி விட்டு நிம்மதியாக இருப்பது போன்ற பாதுகாப்பை அனுபவிப்பது வேறு," என்றார் அமைச்சர் சண்முகம்.