வடக்கு- தெற்கு ரயில் பாதையில் நேற்றுக் காலை ரயில் சேவைத் தடை ஏற்பட்டது. இதற்கு மின்தடை காரணம் என்று ரயில் சேவையை நடத்தும் நிறுவனமான எஸ்எம்ஆர்டி தெரிவித்தது. இது, கடந்த ஒரு வாரத்தில் வடக்கு-= கிழக்கு ரயில் பாதையில் நிகழ்ந்திருக்கும் மூன்றாவது ரயில் சேவைத் தடையாகும். உட்லண்ட்ஸ் நிலையத்தி லிருந்து கிராஞ்சி நிலையம் வரை ரயில் சேவை தடைப்பட்டுள் ளதாக நேற்றுக் காலை 6.34 மணிக்கு தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட ரயில் பாதையைத் தவிர்க்குமாறு பயணி களுக்கு ஆலோசனை வழங்கப் பட்டது.
பாதிக்கப்பட்ட நிலையங் களில் பயணிகளுக்காக இலவசப் பேருந்துச் சேவை வழங்கப்பட்டது. 18 நிமிடங்கள் கழித்து, ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும் பியதாக அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மூன்று எம்ஆர்டி பாதைகளிலும் ஓர் எல்ஆர்டி பாதையிலும் மின்தடை காரணமாக ரயில் சேவைத் தடை ஏற்பட்டது. அப்போது வடக்கு=தெற்கு ரயில் பாதையில் ஜூரோங் ஈஸ்ட் நிலையத்திலிருந்து கிராஞ்சி நிலையம் வரையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்தச் சேவைத் தடை மாலை உச்ச வேளையில் நிகழ்ந்ததால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் நடைபெற்ற மற்றொரு மின்தடையால் வடக்கு-தெற்கு, கிழக்கு=மேற்கு ரயில் பாதைகளில் ரயில் சேவைத் தடை ஏற்பட்டது. அப்போது பாதிக்கப்பட்ட நிலையங்களில் அவசரகால விளக்குகள் மட்டுமே இயங்கின. படம்: வெஸ்லி சங்