கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி கிராஞ்சி விரைவுச் சாலையில் காரை வேகமாக ஓட்டிச் சென்று, மோட்டார்சைக்கிள் ஓட்டியின் மரணத்துக்குக் காரணமாக இருந்த 34 வயது நூர் அகியா அகமட்டுக்கு மூன்று வார சிறைத் தண்டனையும் ஐந்து ஆண்டுகளுக்கு வாகனமோட்டத் தடையும் நேற்று விதிக்கப்பட்டன. அன்று 80 கிலோ மீட்டர் வேகத்தில் இடது தடத்தில் காரை ஓட்டிச் சென்ற அரசாங்க ஊழியரான நூர் அகியா, போக்குவரத்து நெரிசலினால் முன்னே சென்ற கார் நிறுத்தப் பட்டதை முதலில் கவனிக்கவில்லை. திடீரென அதைக் கவனித்து பிரேக்கை அழுத்திய அவர், முன்னாலிருந்த காரில் மோதாமலிருக்க காரை இடதுபுறம் திருப்பியபோது 34 வயது திரு ஜெரமி லிம் இயூ லியோங்கின் மோட்டார்சைக்கிளை மோதினார். நடுத்தடத்திற்குத் தள்ளப்பட்ட மோட்டார் சைக்கிள், ஒரு காரில் மோதியது. வண்டியிலிருந்து தூக்கி ஏறியப்பட்ட திரு ஜெரமி, மற்றொரு வாகனத்தின் அடியில் விழுந்தார். வாகனம் அவர் மீது ஏறியது. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழிந்தார். சிறைத் தண்டனையை எதிர்த்து மனுச் செய்திருக்கும் நூர் அகியா $15,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மாதுக்கு 3 வார சிறை, வாகனம்ஓட்ட 5 ஆண்டுகள் தடை
28 Apr 2016 08:28 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Apr 2016 07:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!