துப்புரவுத் துறையைச் சார்ந்த சிறிய, நடுத்தர வர்த்தகங்களுக்கு விவேக தொழில்நுட்பத் தானியங்கி இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. சிங்கப்பூர் தகவல் மேம்பாட்டு ஆணையம், சிங்கப்பூர் ஊழியரணி மேம்பாட்டு வாரியம், மரினா பே சேண்ட்ஸ் ஆகியவை ஒன்றிணைந்து நேற்று நடத்திய 'கற்றல் பயண'த்தில் இந்தத் தொழில்நுட்பம் அறிமுகப் படுத்தப்பட்டது.
இந்த விவேகத் தொழில்நுட்பம் சிறிய, நடுத்தர தொழில் துறையில் வேலை செயல்முறையை மறுவடிவமைத்து, மனிதவளத்தைச் சார்ந்திருப் பதைக் குறைக்கும் என்று சிங்கப்பூர் தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையமும் சிங்கப்பூர் ஊழியரணி மேம்பாட்டு முகவையும் தெரிவித்தன. 'கற்றல் பயண'த்தின் கீழ் துப்புரவாளர்களும் விவேகத் தொழில்நுட்ப இயந்திரங்களை இயக்கப் பயிற்சி பெறும் வாய்ப்பையும் தொழிநுட்பர்களாகும் வாய்ப் பையும் பெறுவர்.