கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் இருவர் கைது

கன்டோண்மெண்ட் குளோஸ் பகுதியில் மாது ஒருவரிடம் ஆயுதத்தைக் காட்டி பணத்தையும் கைத்தொலைபேசியையும் கொள்ளையடித்த குற்றத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிறு மாலை 5.30 மணி அளவில் அச்சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்துக்குள் சந்தேகத்துக்குரியவரை போலிசார் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட கைத்தொலைபேசி கைப்பற்றப்பட்டது. மற்றொரு சம்பவத்தில் ரெட்ஹில் குளோசில் 72 வயது ஆடவரின் பணப்பை கொள்ளையடிக்கப்பட்டது. மின்தூக்கி நிறுத்துமிடத்தில் ஞாயிறு பகல் 1.10 அளவில் நடந்த அச்சம்பவத்தில் முதியவர் காயமுற்றதாக போலிஸ் தெரிவித்தது. அன்று மாலை 3 மணி அளவில் சந்தேகத்துக்குரியவரை போலிசார் கைது செய்தனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!