கிழக்கு, மேற்கு ரயில் பாதையில் நேற்று 50 நிமிடங்களுக்குச் சேவைத் தடை ஏற்பட்டது. ஜூக்கூன் நிலையத்துக்கும் பூன் லே நிலையத்துக்கும் இடையே மாலை 3.45 மணி அளவில் சேவை தடைப்பட்டதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் டுவீட் செய்தது. "ரயிலில் ஏற்பட்ட கோளாறினால் ஜூக்கூன் நிலையத்துக்கும் பூன் லே நிலையத்துக்கும் இடையே இரு வழிப் பாதைகளில் ரயில் சேவை இருக்காது. 4.05க்கு சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று அந்த டுவீட் செய்தி தெரிவித்தது. பின்னர் 4.30க்கு சேவை தொடங்கும் என மீண்டும் தெரிவித்தது. 50 நிமிடங்கள் கழித்து, கிழக்கு, மேற்கு இரு தடங்களிலும் சேவை மீண்டும் தொடங்கி யது. சேவை தடைப்பட்ட நேரத்தில் இலவச பேருந்து சேவை வழங்கப்பட்டது. கடந்த 10 நாட்களுக்குள் ரயில் சேவையில் மூன்றாவது தடவையாக தடங்கல் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு- மேற்கு ரயில் பாதையில் 50 நிமிடங்களுக்கு சேவைத் தடங்கல்
3 May 2016 06:17 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 May 2016 06:23
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!