வேலைசெய்பவர்களுக்கு அதிக படிப்புகளை வழங்கும் நோக்கில் புதிய பள்ளியொன்றை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு) அமைத்துள்ளது. நிபுணத்துவம், தொடர்கல்விக் கல்லூரி (PaCE) என்று அழைக்கப்படும் அந்தப் பள்ளி, நிபுணர் கள், மேலாளர்கள், நிர்வாகிகள் உட்பட பணியில் இருப்போருக்கான பயிற்சி வகுப்புகளை தேசிய தொழிற்சங்கக் காங்கிரசுடன் இணைந்து உருவாக்கும்.
என்டியுசியுடனான பங்காளித்துவத்தின் கீழ் இந்தப் புதிய பள்ளி பகுதிநேர மாணவர் களுக்கு 28 பட்டப்படிப்புகளை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கும். வகுப்புகள் என்டியு அல்லது என்டியுசி வளாகங்களில் நடத்தப்படும். வகுப்புகள் இணையத்திலும் நடத்தப்படலாம். அதேநே ரத்தில், நகரப் பகுதியில் வகுப்புகளை நடத்துவதற்கு இடங்களை ஆராய்வதாகவும் என்டியு தெரிவித்தது. இந்தப் பள்ளியில் பயில விரும்புவோரின் கல்விப் பின்னணியுடன் வேலை அனுபவமும் கருத்தில் கொள்ளப்படும்.
தகவல் ஆய்வு, மின்னிலக்க மின்னியல், தொழில்முனைப்பு புத்தாக்கம் போன்ற துறைகளில் மூன்று மாத பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளன. இந்தப் பயிற்சி வகுப்புகள் என்டியுவின் பட்டக்கல்வித் திட்டங் களில் இருந்து வடிவமைக்கப்பட்டவை. இப்பயிற்சியைப் பெறுவோர், இத்தகுதியை நிபுணத்துவ சான்றிதழ் அல்லது பட்டக்கல்விக்குப் பயன்படுத்தலாம்.