வெளிநாட்டு ஊழியர்களின்பால், குறிப்பாக தமிழ்நாட்டவர் மீது அன்பு காட்டும் கோக் சாங் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டெபி ஙென்னுக்கு 'உழைப்பாளர் விருது' வழங்கிச் சிறப்பித்துள்ளது மக்கள் கவிஞர் மன்றம். ஞாயிற்றுக்கிழமை உமறுப் புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடைபெற்ற மக்கள் கவிஞர் மன்றத்தின் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழாவில் அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. 'அக்கா' என்று தமிழ் ஊழியர்களால் அன்போடு அழைக்கப் படும் டெபி, தன் ஊழியர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பண்டிகைக் காலப் பரிசுகள் வழங்கி வருவதுடன் அவர்களின் நலனிலும் குடும்ப நலனிலும் மிகுந்த அக்கறை காட்டி வருவதைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டதாக மக்கள் கவிஞர் மன்றம் தெரிவித்தது.
"வசதியில்லாத சூழ்நிலையில் வளர்ந்த எனக்கு பசி என்றால் என்னவென்று தெரியும். வரு மானத்திற்காக இந்நாட்டுக்கு வந்து உழைத்து, நம் வளர்ச்சிக்கு உதவும் ஊழியர்களைப் பார்த்துக்கொள்வதும் அவர்களுக்குப் போதிய உணவு கிடைப்பதை உறுதி செய்வதும் நமது கடமை," என்று அவர் தமது உரையில் கூறினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான நியமன நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி கே.தனலட்சுமியிடம் இருந்து உழைப்பாளர் விருதைப் பெறும் டெபி ஙென் (இடது). விழா மேடையில் 4 மடிக்கணினிகளை இலவசமாக மன்றத்திடம் கொடுத்த டெபி, அவற்றைத் தகுதி வாய்ந்த கட்டுமான ஊழியர்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். படம்: மக்கள் கவிஞர் மன்றம்
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான நியமன நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி கே.தனலட்சுமியிடம் இருந்து உழைப்பாளர் விருதைப் பெறும் டெபி ஙென் (இடது). விழா மேடையில் 4 மடிக்கணினிகளை இலவசமாக மன்றத்திடம் கொடுத்த டெபி, அவற்றைத் தகுதி வாய்ந்த கட்டுமான ஊழியர்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். படம்: மக்கள் கவிஞர் மன்றம்