சிங்கப்பூரில் முதியோரின் வாழ்க்கை மேம்பட வேண்டும். அவர்கள் இந்நாட்டின் வளர்ச் சிக்காகப் பாடுபட்ட முது கெலும்புகள். அவர்கள் தங்கள் அந்திமக் காலத்தில் மனநிறை வான வாழ்க்கை வாழ்வதற்குத் திட்டங்கள் வகுக்கப்பட வேண் டும் என்று சிங்கப்பூர் ஜன நாயகக் கட்சியின் தலைமைச் செயலாளரும் அக்கட்சியின் புக்கிட் பாத்தோக் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட் பாளருமான டாக்டர் சீ சூ ஜுவான் தெரிவித்துள்ளார். நேற்றிரவு புக்கிட் பாத்தோக் தொழிற்பேட்டையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய டாக்டர் சீ, "முதிர்ச்சியடைந்த பேட்டையாக உள்ள புக்கிட் பாத்தோக்கில் ஏராளமான முதியவர்கள் வசிக்கிறார்கள். அவர்களில் பலர் தனியாக வாழப் பயப்படுகிறார்கள் என் பதை நாங்கள் தொகுதிச் சுற்று லாவின்போது நேரடியாக அறிந்துகொண்டோம்.
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவான் (நடுவில்) புக்கிட் பாத்தோக் செண்ட்ரலில் நேற்றுக் காலை குடியிருப்பாளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்