சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தென் கொரியத் தலைநகர் சோலில் உள்ள இன்சியன் அனைத்துலக விமான நிலையத்தில் மற்றொரு விமானத்துடன் நிகழவிருந்த மோதல் அதிர்ஷ்டவ சமாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தை தற்போது ஊடகங்கள் கசிய விட்டுள்ளன. SQ16 என்னும் அந்த விமானம் சோலில் இருந்து சான் ஃபிரான்சிஸ்கோ நகருக்குப் பறக்கத் தயாராகி ஓடுபாதையில் சென்றுகொண்டு இருந்த வேளை யில் அந்த ஓடுபாதையில் கொரி யன் ஏர் விமானம் ஒன்று தவறு தலாகக் காணப்பட்டது. அதனால் ஓட்டத்தை உடனடியாக நிறுத்து மாறு SQ16 விமானிக்கு விமானக் கட்டுப்பாட்டு அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.
மணிக்கு 90 கி. மீ. முதல் 100 கி. மீ. வரையிலான வேகத் தில் ஓடிக்கொண்டு இருந்த அந்த விமானத்தை சட்டென்று நிறுத்தியதன் காரணமாக அதன் சக்கரங்கள் பழுதடைந்தன. அந்த இடத்திலேயே 186 பயணிகளும் 18 விமான ஊழி யர்களும் கீழே இறக்கிவிடப் பட்டனர். அவர்கள் தங்குவதற்கு வசதி செய்து தரப்பட்டது. புதிய சக்கரங்கள் மாற்றப்பட்டு கிட்டத்தட்ட 19 மணி நேரம் கழித்து SQ16 விமானம் கிளம்பிச் சென்றது. இச்சம்பவத்துக்குக் காரணமான கொரியன் ஏர் KE929 விமானத்தின் விமானி, விமானக் கட்டுப்பாட்டு அதிகாரியின் உத்தரவுகளை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு மணி நேரம் தாமத மாக அந்த விமானம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குப் புறப் பட்டுச் சென்றது.