நடைபாதைகளில் சைக்கிள்கள், மின்ஸ்கூட்டர்கள், மின் சக்கர வண்டிகள் போன்ற வாகனங்களில் பொறுப்பில்லாமல் வேகமாகச் செல்வதை தடுக்கும் நோக்கத்தில் நிலப் போக்குவரத்து ஆணையம் புதிய அமலாக்கக் குழுவை களத் தில் இறக்கி இருக்கிறது. பிரகாசமான மஞ்சள் நிற டிசட்டை, கருநீல அரைக்கால் சட்டை அணிந்திருக்கும் இந்த 'நடைபாதை நடமாட்ட அமலாக் கக் குழுவினர்' அன்றாடம் தீவு முழுவதும் பணியில் இருப்பார்கள்.
நடைபாதைகளை மூர்க்கமாகப் பயன்படுத்துவதை இவர்கள் தடுப் பார்கள் என்று நிலப் போக்கு வரத்து ஆணையம் நேற்று தெரி வித்தது. பேருந்து நிறுத்தங்கள், பள்ளிக் கூடங்கள், நடையர் சாலைக் கடப்பிடங்கள் உள்ளிட்ட சைக்கிளோட்டிகளும், நடையர் களும் அதிகமாக புழங்கும் இடங் களில் தான் ஒருமித்த கவனம் செலுத்தப் போவதாக இந்த ஆணையம் தெரிவித்தது.