வேலையிட மரணங்களைத் தவிர்க் கும் நோக்கில் கடுமையான தண் டனை, வேலையிடப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் முதலாளிகளுக்கு கூடுதல் ஆதரவு போன்ற நடவடிக்கைகளை மனிதவள அமைச்சு மேற்கொள்ளவுள்ளது. வேலையிடத்தில் பாதுகாப்பு, சுகாதாரத் தரம் குறைவாக இருந் தால், குறைந்தபட்ச வேலை நிறுத்த உத்தரவு காலத்தை அதிகரிப்பது உட்பட கடும் அபராதத்தை அமைச்சு அறிவித்துள்ளது. குறைந்தபட்ச வேலை நிறுத்த ஆணை இரு வாரங்களில் இருந்து தற்போது மூன்று வாரங்களாக கூட்டப்பட்டுள்ளது. வேலை நிறுத்த உத்தரவு பெற்ற நிறுவனங்கள் அல்லது வேலையிட விபத்தைச் சந்தித்த நிறுவனங்கள் வர்த்தக கண்காணிப்புத் திட்டத்தின்கீழ் கொண்டு வரப்படும். அத்துடன் அந்நிறுவனங்களின் வேலை அனுமதி 'பாஸ்'கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம். பாதுகாப்புப் பிரச்சினைகளைச் சரிசெய்யும் வரையில் அந்நிறுவனங் கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் சேர்க்க முடியாது.
கட்டுமானப் பகுதியைப் பார்வையிட்ட மனிதவள துணை அமைச்சர் சேம் டான் (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்