ரயிலில் மூதாட்டி ஒருவருக்கு உடனடியாக எழுந்து இருக் கையைக் கொடுக்கவில்லை என்பதால் கட்டுமான ஊழியரை தலையில் குத்தி, வயிற்றில் உதைத்த குற்றத்தை ஒப்புக்கொண்ட 49 வயது சின் போ ஹெங்குக்கு இரு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையில் மிரட்டியது தொடர்பான முன்னைய குற்றமும் கவனத்தில் எடுக்கப்பட்டது. சென்ற ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி நியூட்டன் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலில் சின் பயணம் செய்தார்.
ரயிலில் ஒரு மூதாட்டி ஏறியதும் முதியோர், இயலா தோருக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்த கட்டு மான ஊழியரான சென் சோங்ஸிடம், 32, இருக்கையைக் கொடுக்கச் சொன்னார். பல கேன்கள் பீர் குடித்திருந்த சென் எழுந்து நிற்க சிறிது நேரம் ஆகும் என்றார். அவர் மெதுவாக எழுந்ததால் கோபமடைந்த சின், அவரது தலையின் இடது புறத்தில் காயம் ஏற்படும் அளவுக்குப் பல முறை குத்தினார். வயிற்றிலும் உதைத்தார். இக்குற்றத்திற்கு சின்னுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறையும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.