சிங்கப்பூரில் மென்பொருள் திருட்டு கடந்த மூன்றாண்டுகளில் குறைந்திருப்பதாக அனைத்துலக மென்பொருள் கருத்தாய்வு தெரிவிக்கிறது. ஆனாலும் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கிடையே ஒப்பிடுகையில், மென்பொருள் திருட்டில் சிங்கப்பூர் தொடர்ந்து முக்கிய இடம்பிடித்து வருகிறது. உரிமம் இல்லாத மென்பொருட்களைப் பயன்படுத்துவதன் தொடர் பில் அனைத்துலக அளவில் சந்தைப்படுத்தும் தொழில்துறைக் கண்காணிப்பு அமைப்பான பிஎஸ்ஏ, சந்தை ஆய்வு நிறுவனம் ஐடிசி ஆகியன ஆய்வு மேற் கொண்டன.
அவை நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, மூன்றில் ஒரு பயனீட்டாளர்கள், தகவல் தொழில்நுட்ப மேலாளர்கள், நிறுவனங் களில் கணினி பயன்படுத்துவோர் ஆகியோர் குறைந்தபட்சம் ஒரு உரிமம் இல்லாத மென்பொருளையாவது பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டில் வீடுகள், அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்ட மென்பொருட்களில் 30% உரிமம் இல்லாதவை. 2013ஆம் ஆண்டில் அந்த அளவு 32 விழுக்காடாக இருந்தது.