நெருக்கடி நேரத்தில் பரவும் வதந்திகளை ஒடுக்குவதில் சமூ கத் தலைவர்களுக்கும் அமைப்பு களுக்கும் முக்கிய பங்கு இருக் கிறது என்று கலாசார, சமூக இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார். பல இன, பல சமய சிங்கப் பூரில் சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டத் தேவைப்படக்கூடிய உணர்வுகளை இளையர்கள் நன்கு புரிந்துகொள்ள உதவும்படி சமூகத் தலைவர்களுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
கலாசார, சமூக இளையர்துறை அமைச்சின் ஏற்பாட்டில் மரினா மாண்டரின் ஹோட்டலில் நேற்று அனைத்து இன, சமய நன்னம் பிக்கைக் குழுவின் பயிலரங்கு நடந்தது. அதில் அமைச்சர் கிரேஸ் ஃபூ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பயிலரங்கைத் தொடங்கி வைத்து உரையாடிய போது நெருக்கடி நேரத்தில் கிளம் பும் புரளிகள் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என்று அவர் எச் சரித்தார்.
இத்தகைய புரளிகளை ஒடுக்க வேண்டுமானால் சரியான நேரத் தில் மக்களுக்குச் சரியான, துல் லியமான தகவல்கள் தெரிவிக்கப் பட வேண்டும். இப்படிச் செய்தால் தவறான தகவல்கள் அடிபட்டுப் போய்விடும் என்றார் அமைச்சர். ஒருவர் மற்றொருவரின் நம் பிக்கைக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்ற நன்னெறியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டியது முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தி னார். இப்படிச் செய்வதன் மூலம் இளையரிடம் பொய்களையும் தவ றான தகவல்களையும் நிராகரிக்கும் பலம் ஏற்படும் என்றார் அமைச்சர்.
சமூகப் பிணைப்புக்கு தங்கள் பங்கை எப்படி எப்படி எல்லாம் ஆற்றலாம் என்பதைப் பற்றி இளையர்கள் விவாதித்ததை அமைச்சர் கிரேஸ் ஃபூ, நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் இருவரும் செவிமடுத்தனர். படம்: கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு