பங்ளாதே‌ஷியர் நால்வர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம்

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட பங்ளாதேஷ் ஊழியர்களில் நால்வர் பயங்கர வாதத்திற்கு நிதியுதவி வழங்கிய அல்லது நிதி திரட்டிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. ரஹ்மான் மிஸானுர், 31, மியா ரூபெல், 26, சொஹெல் ஹௌலதர் இஸ்மாயில் ஹௌலதர், 29, முகம்மது ஜபாத் கைசர் ஹாஜே நோருல் இஸ்லாம் சௌடகர், 31, ஆகிய அந்த நால்வரும் நீதிமன்றத் தில் நேற்று தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர். பங்ளாதே‌ஷில் பயங்கரவாதச் செயல்களை மேற்கொள்வதற்காக நிதி வழங்கியதாக அல்லது நிதி திரட்டியதாக அவர்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்ட அறுவரில் ஸாமான் தௌலத், 34, மமூன் லியாகத் அலி, 29, என்ற இரு வரும் தங்கள் மீதான குற்றச் சாட்டை மறுத்தனர்.

அவர்களுக்கான வழக்குக்கு முந்திய கலந்துரையாடல் இம்மாதம் 9ஆம் தேதி இடம்பெறுகிறது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பொறுப்புகள் கொடுக் கப்பட்டிருந்ததை நீதிமன்ற ஆவ ணங்கள் காட்டின. அக்குழுவின் தலைவராக ரஹ்மானும் துணைத் தலைவராக மமூனும் செயல்பட் டனர். குழுவின் நிதிப் பிரிவை மியாவும் ஊடகப் பிரிவை ஜபாத் தும் கவனித்துக்கொண்2டனர். ஸாமான், சொஹெல் ஆகியோர் முறையே குழுவின் பாதுகாப்பு, போர் வீரர்கள் பிரிவில் இருந்தனர். மியாவும் ஜபாத்தும் பயங்கரவாத நோக்கங்களுக்காக பணம் வைத் திருந்தனர் என்ற இன்னொரு குற்றச்சாட்டையும் எதிர்நோக்கு கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!