வில்சன் சைலஸ்
சுகாதார பிரச்சினைகளோடு தனி நபராக அல்லும் பகலும் உழைத்து குடும்பத்தைப் பராமரித்து வருகிறார் திரு ராஜேந்திரன் கிருஷ்ணன், 50. தம் ஒருவருடைய சம்பாத் தியத்தில் மனைவி, தம்முடைய தேவைகளைப் பூர்த்திசெய்ய முயன்று வரும் இவருக்கு மாத இறுதிகளைச் சமாளிப்பது போராட்டமாகவே இருக்கிறது. இதனால், அவ்வப்போது பயனீட்டுக் கட்டணங்களை திரு ராஜேந்திரன் நேரத்தோடு செலுத்த இயலாமல் போவதும் அவரது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்படுவதும் உண்டு.
மின்கட்டணத்தை திரு ராஜேந்திரன் நேரத்தோடு செலுத்த வேண்டிய கவலையை நீக்கக் கைக்கொடுக்கிறது லெக்சஸ் சிங்கப்பூர் போன்ற பெரு நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்படும் வடமேற்கு பயனீட்டுக் கட்டண உதவித்திட்டம். திரு ராஜேந்திரன் போன்ற வசதி குறைந்தவர்களுக்கு உதவ வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றத்துடன் பங்காளித்துவ ஒப்பந்தத்தில் நேற்று முன்தினம், இணைந்தது 'லெக்சஸ் சிங்கப் பூர்' நிறுவனம்.
வடமேற்கு வட்டார மேயர் டாக்டர் டியோ ஹோ பின்னிடமிருந்து (வலமிருந்து இரண்டாவது) திரு ராஜேந்திரனின் சார்பாக அவருக்கான பயனீட்டுக் கட்டண உதவித் தொகையைப் பெற்றுக்கொண்டார் அவரது மனைவி திருவாட்டி அன்பழகி சந்தரசேகரன்.