மியன்மாரிலிருந்து தமிழவேல்
வரும் டிசம்பர் முதல் தேதியில் இருந்து மியன்மாருக்கு குறுகிய கால பயணம் செல்ல சிங்கப்பூரர்களுக்கு இனிமேல் விசா தேவை யில்லை. அதேபோல மியன்மார் நாட்டவருக்கும் சிங்கப்பூர் விசா தேவையிருக்காது. சாதாரண கடவுச்சீட்டை வைத்திருக்கும் சிங்கப்பூரர்களும் மியன்மார் நாட்டவரும் ஒரு மாதம் வரை விசா இல்லாமல் ஒருவர் மற்றவரது நாட்டில் தங்கலாம். மியன்மாருக்கு மூன்று நாட் கள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் லீ சியன் லூங் நேற்று மியன்மார் அதிபர் தின் சாவ் அளித்த விருந்து உபசரிப்பில் இதனை அறிவித்தார். முன்னதாக பிரதமர் லீயும் மியன்மார் அரசாங்க ஆலோசகர் திருவாட்டி ஆங் சான் சூ சீ முன்னிலையில் மியன்மாருக்கான சிங்கப்பூர் தூதர் திரு ராபர்ட் சுவா, மியன்மாரின் வெளியுறவுத் துணை அமைச்சர் திரு கே டின் இருவரும் விசா ரத்து தொடர்பான அரசதந்திர குறிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.
இரு நாடுகளுக்கிடையேயும் வளர்ந்து வரும் உறவின் ஒரு பகுதியாக இந்த விசா ரத்து இடம்பெறுகிறது. இருநாடுகளுக்குமிடையே பயணம் செல்வோரின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது இரு நாடுகளுக்கிடையே வாரத்திற்கு 49 விமானங்கள் பறக்கின்றன. புதிய ஏற்பாடு இருநாட்டினரும் பயணம் செய்ய மேலும் வசதியாக இருக்கும் என்றார் பிரதமர். மேலும் யங்கூனில் உள்ள சிங்கப்பூர்=மியன்மார் தொழில்முறை கல்விக்கழகத்தில் உச்சத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சிங்கப்பூரில் குறுகியகால கல்வித் தொழில்முறைப் பயிற்சித் திட்டத்தை மேற்கொள்ள சிங்கப்பூர் அரசு நிதி உதவி வழங்கவுள்ளது.
மியன்மார் சிங்கப்பூரின் முக் கியமான பங்காளிகளில் ஒன்று. சிங்கப்பூரில் மாணவர்கள், ஊழி யர்கள், தொழில்நுட்பர்கள் எனக் கிட்டத்தட்ட 200,000 மியன்மார் நாட்டவர்கள் வசிக்கின்றனர். அவர்கள் பல வழிகளில் பங்களிக் கின்றனர் என்றார் பிரதமர்.
பிரதமர் லீ சியன் லூங்கிற்கு மியன்மார் தலைவர் தின் சாவும் அவரது துணைவியாரும் நேற்றிரவு விருந்தளித்து உபசரித்தனர். படத்தில் இடமிருந்து மியன்மார் அரசாங்க ஆலோசகர் திருவாட்டி ஆங் சான் சூ சீ, பிரதமர் லீ சியன் லூங், மியன்மார் அதிபர் தின் சாவ், திருமதி லீ. படம்: சாவ் பாவ்