மியன்மாரில் யங்கூன் நகருக்கு வெளியேயுள்ள பெரிய தொழிற் பேட்டையான திலாவா பொருளியல் வட்டாரத்தில் சிங்கப்பூர் முன்னணி முதலீட்டாளராக உள்ளது என இலெவன் மீடியா குரூப் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் முதலீடு, நிறுவன நிர்வாகத்துக்குப் பொறுப்பு வகிக்கும் இயக்குநரகத்தை மேற்கோள்காட்டி அச்செய்தி வெளிவந்துள்ளது. பொம்மைத் தயாரிப்பு முதல் கார்களை ஒருங்கிணைக்கும் நிறுவனம், ஆழ்கடல் துறைமுகம் என பல தொழில்களுடன் யுஎஸ் $1.5 பில்லியன் திலாவா சிறப்பு பொருளியல் வட்டாரம் இதுவரை யில் யுஎஸ் 4713.3 மில்லியன் முதலீட்டை ஈர்த்துள்ளதாக அச்செய்தி தெரிவித்தது.
இதில் யுஎஸ் $298.15 மில்லியன் மதிப்பிலான 13 முதலீடுகளுடன் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. அடுத்த நிலையில் யுஎஸ் $235 மில்லியன் முதலீட்டுடன் ஜப்பான் உள்ளது. ஹாங்காங், தாய்லாந்து, ஐக்கிய அரபு சிற்றரசுகள், பனாமா, சீனா, மலேசியா போன்றவை அங்கு முதலீடு செய்துள்ள மற்ற சில நாடுகள். மற்ற சில நாடுகள் சிங்கப்பூர் வழியாக அங்கு முதலீடு செய் கின்றன. எடுத்துக்காட்டாக, முன்னைய ராணுவ ஆட்சிக்கு எதிரான வர்த்தகத் தடைகளை தொடர்ந்து நீட்டிக்கும் அமெரிக்கா, அதனைத் தவிர்ப்பதற்காக சிங்கப்பூர் வழியாக முதலீடு செய்வதாக அச்செய்தி குறிப்பிட்டது.