அங் மோ கியோவில் ‘டிபி’ பரிசோதனை

அங் மோ கியோ அவென்யூ 3 புளோக் 203ல் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு சுகாதார அமைச்சு காசநோய் (டிபி) பரிசோதனை அளிக்க முன்வந்துள்ளது. அந்த புளோக்கில் உள்ள அறுவருக்கு காசநோய் இருப்பது தெரிய வந்துள்ளது என்றும் ஆனால் அவர்களின் நோய் ஒருவருடன் ஒருவர் தொடர்பு இல்லாதது என்றும் அமைச்சு விளக்கியது. இலவசமாக அளிக்கப்படும்

இந்தப் பரிசோதனைகள் இன்று முதல் 19ஆம் தேதிவரை காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை புளோக் 203 வெற்றுத் தளத்தில் இடம் பெறும். இந்தத் தேதிகளுக்குள் பரிசோதனை செய்து கொள்ள முடியாதவர்கள் இம்மாதம் 30ஆம் தேதிக்குள் 'சாட்டா' சமூக சுகாதார மருந்தகத்தில் செய்துகொள்ளலாம். அந்த புளோக்கில் 2011 ஜூலை முதல் வசித்த முன் னாள் குடியிருப்பாளர்கள் இந்த இலவசப் பரிசோதனையில் பங்கேற்க விரும்பினால் அவர்கள் இம்மாதம் 30ஆம் தேதிக்குள் 'சாட்டா' மருந்தகத்துக்குச் செல்லலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!