முழுநேர தேசிய சேவையாளர்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் பிஓஎஸ்பி வங்கி புதிய திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. 'சேவ்-அஸ்-யு-செர்வ்' எனப்படும் அந்தத் திட்டத்தை 'ஹோம் டீம்என்எஸ்', சாஃப்ரா ஆகியவற்றுடன் சேர்ந்து பிஓஎஸ்பி வங்கி உருவாக்கியுள்ளது. இது தேசிய சேவையாளருக்காகத் தொடங்கப்பட்டுள்ள முதல் வங்கிச் சேமிப்புத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் தேசிய சேவையாளர்கள் மாதந்தோறும் சேமிக்கும் தொகைக்கு ஆண்டுக்கு 2% விகிதத்தில் வட்டி வழங்கப்படவுள்ளது. 24 மாதங்களுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை தேசிய சேவையாளர் இந்தத் திட்டத்தில் சேமிப்பர்.
இந்தப் புதிய திட்டத்தை உள்துறை மூத்த துணை அமைச்சரும் 'ஹோம் டீம்என்எஸ்'ஸின் தலைவருமான திரு டெஸ்மண்ட் லீ நேற்று தொடங்கி வைத்தார். தேசிய சேவையாளர்கள் 'ஹோம் டீம்என்எஸ்=பேஷன்=பிஓஎஸ்பி' பற்று அட்டை, சாஃப்ரா டிபிஎஸ் பற்று அட்டை ஆகியவற்றைப் பயன்படுத்தினால் 2% கூடுதல் தள்ளுபடியும் பெறுவர். வரவேற்பைப் பொறுத்து இத் திட்டத்தை பொதுமக்களுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிடுவதாக பிஓஎஸ்பி வங்கி தெரிவித்தது.