மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு நேற்று மேற்கொண்ட இரு வெவ்வேறு அதிரடிச் சோத னைகளில் $236,000 மதிப்புள்ள போதைப்பொருட்கள் சிக்கியுள்ளன. அத்துடன் போதைப்பொருள் கும்பலின் தலைவர் என்று நம்பப்படும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 56 வயது சிங்கப்பூரர். அவர் தங்கி யிருந்த லோரோங் 39 கேலாங் என்னும் முகவரியில் 1.8 கிலோ எடையுள்ள ஹெராயின், 130 கிராம் ஐஸ், 40 எரிமின் மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவரின் உதவியாளர் என்று நம்பப்படும் 46 வயது சிங்கப்பூரர் ஒருவர் பிடோக் நார்த் ரோட்டில் கைது செய்யப்பட்டார். ஜாலான் புக்கிட் மேராவில் பிற்பகல் 3.30 மணிக்கு 48 வயது சிங்கப்பூரர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 500 கிராம் ஹெராயினும் $13,000 ரொக்கமும் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து அவருடைய வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் ஹெராயின் மற்றும் அளவை இயந்திரங்கள், காலி பிளாஸ்டிக் பைகள் போன்றவை சிக்கியதாக மத்தியப் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு கூறியது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அனைவரின் மீதும் விசாரணை மேற்கொண்டுள்ளதாக மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு கூறியது.
போதைப்பொருள் கும்பலிடம் இருந்து சிக்கிய பணமும் போதைப் பொருளும். படம்: மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு